பைக் மீது எஸ்யூவி கார் மோதி விபத்து-4 பேர் பலி..

நாக்பூரில் எஸ்யூவி கார் பைக் மீது மோதியதில் 70-80 அடி கீழே விழுந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் வெள்ளிக்கிழமை(செப் 9) ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனம் (எஸ்யூவி) மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

இச்சம்பவத்தின் போது உயிரிழந்ததாக கூறப்படும் நால்வரும் 70 முதல் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் உயிரிழந்தவர்களில் ஐந்து மற்றும் பதினொரு வயதுடைய இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

author avatar
Varathalakshmi

Leave a Comment