ரோகித் சர்மாவை போல பேட்டிங் செய்ய நினைத்தேன் – சுனில் கவாஸ்கர்..!

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மா போல் விளையாட நினைத்ததாக சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் செய்த சாதனைகளைப் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம் இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சுனில் கவாஸ்கர் கூறியது ஒருநாள் போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளில் கூட ரோகித் சர்மா அவர் சந்திக்கும் முதல் பந்தை சிக்சருக்கு அடிப்பார் நான் அப்பொழுது அப்படி ஒரு அட்டகாசமான விளையாட நினைத்தேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மேலும் அப்போது உள்ள சூழ்நிலையில் என் மீதிருந்த நம்பிக்கையை மிகவும் குறைவாகவே இருந்தது ரோகித் சர்மா போல நான் அப்போது என்னால் விளையாட முடியவில்லை ஆனால் அடுத்த தலைமுறை வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை இப்போது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும் ரோஹித் சர்மா கடந்த ஆண்டு மிகவும் சிறப்பாக விளையாடினர் இந்த ஆண்டு வருகின்ற போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக விளையாடுவர் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார் மேலும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு வரும் வீரர்களுக்கு உதாரணமான திகழ்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.