தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ல் இருந்து கோடை விடுமுறை.!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு, தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்கி,ஏப்ரல் 20ம் தேதியோடு முடிவடைகிறது. இதனால் ஏப்ரல் 21 ல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கும் என்றும், ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்