சுகன்யா சம்ரித்தி யோஜனா: மாதம் ரூ.12,500 முதலீடு செய்து ரூ.64 லட்சத்தைப் பெறுங்கள்..

இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்று சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்று அழைக்கப்படுகிறது. 2015 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளின் (10 வயது வரை) பெற்றோர்கள் சுகன்யா சம்ரித்தி கணக்கைத் தொடங்கலாம்.

1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ், ஒரு நிதியாண்டில் ஒரு SSY கணக்கில் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்தால் வரி விலக்கு பெறத் தகுதியுடையது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் 7.6% ஆகும்.

21 வருடங்கள் லாக்-இன் செய்யப்பட்ட பிறகு, ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு ரூ.12,500 முதலீடு செய்தால், SSY திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் வரியில்லாப் பணத்தின் அதிகபட்ச தொகையான ரூ.64 லட்சத்தை ஒரு நபர் தனது பெண் குழந்தைக்காகக் சேமிக்க முடியும். அப்பெண் குழந்தைக்கு 21 வயது ஆகும் வரை அந்த முழு முதலீட்டை திரும்பப் பெற முடியாது.

பெண் குழந்தைக்கு 18 வயது ஆன பிறகு, 50% திரும்பப் பெறும் விருப்பத்தைத் தேர்வுசெய்யாமல், முழு காலத்திற்கும் 7.60% பிளாட் SSY வட்டி விகிதத்தை எடுத்துக் கொண்டால், SSY கால்குலேட்டர் மதிப்பீட்டின்படி, முதிர்ச்சியின் போது ஒருவர் சுமார் ரூ.64 லட்சம் பெறுவார்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment