4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை….!!!

திருச்சியால் கடன் சுமையால் 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி கே.கே நகரை சேர்ந்தவர் முருகானந்தம் – வெள்ளையம்மாள். முருகானந்தம் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 8வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் மித்ரா என்ற குழந்தை ஒன்று உள்ளது. இவர்களுக்கு கடன் இருந்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முருகானந்தம் கோவைக்கு சென்றுள்ளார். பணம் கொடுத்தவர்கள் வந்து கடன் கேட்டுள்ளனர். இதனையடுத்து மனமுடைந்த வெள்ளையம்மாள் தன் குழந்தைக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்துள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment