மாணவர்களும் மாணவிகளும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக செல்ல கூடாது ! மீறினால் அபராதம் ! பல்கலைக்கழகம் போட்ட கண்டிஷன் ! !

பாகிஸ்தானில் உள்ள சார்சத்தா பகுதியில் பச்சாகான் எனும் பல்கலைக்கழகம் உள்ளது.இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான  மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இந்த பல்கலைக்கழகம் சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ மாணவிகள் ஒன்றாக செல்ல கூடாது என்றும் ஆண்களும் பெண்களும் ஒன்றாக செல்வது  இஸ்லாமியத்திற்கு எதிரானது எனவும் இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க படும் என்றும் கூறப்படுகிறது.மேலும் இது  குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்க படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டு இருந்தது.

இந்த பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையை  பார்த்த பலரும் இதற்கு தற்போது ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.மேலும் இது குறித்து சிலர் கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.