நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் நிகழந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் என்ற கிராமத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி எடுத்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சந்துரு என்ற மாணவர் அம்மம்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் பயிற்சி எடுத்து வந்த சந்துரு  திடீரென விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தற்பொழுது தற்கொலை செய்து கொண்டது ஏன் என சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment