ஆம்பன் புயலால் இந்த மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு.!

ஆம்பன் புயலால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பால் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தென் கிழக்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை தாழ்வு மண்டலமாக வலுவுப்பெறும். இதனால், 17-ம் தேதி வரை வடமேற்கு திசையிலும், அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் ஆம்பன் புயல் நகர வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக ஆம்பன் புயலால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பால் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று பலமாக வீசும் என்பதால் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கசெல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk