புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 10 குழு – அமைச்சர் ஜெயக்குமார்

புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 10 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் புயலும் உருவாகி  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி, குமரிக்கு மீன்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் 35 அலுவலர்களை கொண்ட 10 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.  10 குழுவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.