முதல் திருநங்கை அரசு மருத்துவர்கள்.! தெலுங்கானா அரசு அசத்தல்.!

தெலுங்கானாவில், முதல்முறையாக திருநங்கை அரசு மருத்துவராக இருவர் நிமிக்கப்பட்டுள்ளனர்.

பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் என இரு திருநங்கைகள் மருத்துவம் முடித்து, இருந்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் வேலை மறுக்கப்பட்ட நிலையில் தெலுங்கானா அரசு இவர்களுக்கு அரசு மருத்துவ வேலையை வழங்கியுள்ளது. தெலுங்கானாவில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை அரசு மருத்துவர்கள் இவர்கள் தான் என்பது .

இருவரும் உஸ்மானியா அரசு மருத்துவமனையில் மருத்தவர்களாக சேர்ந்துள்ளனர். இது பற்றி பிராச்சி ரத்தோட் கூறுகையில், ‘ அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 2018 முதல் சுமார் 15 மருத்துவமனைகளால் நான் நிராகரிக்கப்பட்டேன். ‘ என கூறி நெகிழ்ந்தார் பிராச்சி ரத்தோட்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment