இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம்…!

கோவையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம்

இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தலை கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என்றும், விதிகளை மீறி ஏர் – ஹார்ன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.