இலங்கை : கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் 17 அமைச்சர்கள் பதவியேற்பு …!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளதுடன், அங்கு மின்சார தட்டுப்பாடும் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என கோரி இலங்கை மக்கள் வீதிகளில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே  உடன் இணைந்து அண்மையில் அமைச்சரவையில் உள்ள அனைவருமே ராஜினாமா செய்தனர். தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், 17 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். மேலும், மூன்று 3 புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal