சாத்தான்குளம் வழக்கு.! ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு.!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. இதைதொடர்ந்து, ஜாமீன் மனு மீதான விசாரணை வருகின்ற 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

author avatar
murugan