வெளியூர் செல்வோர் கவனத்திற்கு… போக்குவரத்து துறை அமைச்சர் கூறிய புதிய தகவல்.!

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், மொத்தமாக 10518 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

நாளை மறுநாள் தீபாவளி தினம் என்பதால், வெளியூரில் வேலைபார்க்கும் நபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று முதல் புறப்பட்டனர். அதனால் சென்னை, காஞ்சிபுரம் எல்லையில் வாகன நெரிசல் கூட்டம் அதிகரித்து வருகிறது.

வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகளை தமிழக அரசு செய்துள்ளது அதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதாவது, நேற்று வரை 91 ஆயிரம் பயணிகள் சென்றுள்ளனர். வழக்கமாக 2100 பேருந்துகள் இயக்கப்படும். தற்போது கூடுதலாக நாளை 1586 பேருந்துகளும் , நாளை மறுநாள் 1195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளனா. மொத்தமாக சென்னையில் இருந்து 10518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment