ஆஸ்திரேலியாவில் கேரள இளம் பெண் உயிரிழப்பு! வெளியான காரணம்

Australia: ஆஸ்திரேலியாவில் தீவிபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் ஷெரின் ஜாக்சன். இவர் ஆஸ்திரேலியாவின் டப்போ மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். ஷெரின் கணவர் பெயர் ஜாக்சன் ஆகும். இந்த நிலையில் ஷெரின் வசித்து வந்த வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Read More – நபரின் வயிற்றுக்குள் உயிருடன் விலாங்கு! வியந்த மருத்துவர்கள்

இதில் சிக்கி படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஷெரினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது அவர் மட்டுமே வீட்டில் இருந்திருக்கிறார்.

Read More – மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: 11 பேர் கைது…பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு!

வீட்டில் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியின் போது தீயணைப்பு வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, அது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.