அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் நிதி உதவியை வழங்கிய பின் பேசிய அவர், தேர்தல் அறிக்கையை தயாரித்து வருவதாகவும், அதில் ஆசிரியர் சங்க கோரிக்கைகளும் இடம்பெறும் என நம்புவோம் என்று கூறியுள்ளார்.
சென்னை வண்ணாரப் பேட்டையில் 13 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட சம்பவம் கண்களை கலகடிக்கிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது புகார் அளிக்க தயங்கும் மனநிலையை மாற்றவேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சியில் பெண் குழந்தைகள் மட்டுமின்றி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மாவட்ட ரீதியாகத் தனி நீதிமன்றம் அமைத்து ஒரு நாள் கூட தாமதமின்றி தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். திமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…