இன்று காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை.!

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன்,  இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தி காணொலி மூலம் ஆலோசனை.

காங்கிரஸ் கட்சியில் மாற்றம் வேண்டும் என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்ட 23 பேர் சோனியாகாந்தி கடிதம் எழுதினர். இதை தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காணொளி மூலம் காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.கூட்டம் முடிந்த பின்னர் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று 6 மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், காங்கிரஸ்  இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில், ஜி.எஸ்.டி. மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காங். சோனியாகாந்தி ஆலோசிக்க உள்ளார்.

author avatar
murugan