அருமை…தமிழில் மென்பொருள் கருவிகள் – ஐடி நிறுவனங்களுக்கு அழைப்பு!

தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்குவதற்கு பிரபல மென்பொருள் நிறுவனங்களுக்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் அழைப்பு.

உலகெங்கும் வாழும் தமிழர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழர்தம் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இணையவழி முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழில் மென்பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட கணித்தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் இணையக் கல்விக் கழகம் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது.

இந்நிலையில்,தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்குவதற்கு பிரபல மென்பொருள் நிறுவனங்களுக்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மொழி பயன்பாடு அதிகரித்து வருவதால் அதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மென்பொருள் கருவிகளை உருவாக்க பிரபல மென்பொருள் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.