கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இதுவரை 1,17,915 பேர் வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில், 4,979 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இன்று 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி மேலும் இன்று ஒரே நாளில் 4,059 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மேலும் 4,059 பேர் டிஸ்சார்ஜ் இந்நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,856 லிருந்து 1,17,915 ஆக அதிகரித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.