ரேஷன் அரிசி கடத்தல் – புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்!

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்தது பொதுவிநியோக துறை.

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் பொதுவிநியோக துறை தெரிவித்துள்ளது.

இந்த இலவச தொலைபேசி எண் சென்னையில் ஏடிஜிபி அருணின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கட்டுப்பாடு அறையில் செயல்படுவதாகவும், பொதுமக்கள் அச்சம் இல்லாமல் பொது விநியோகப் பொருள் கடத்தல், பதுக்கல் உள்ளிட்ட அனைத்து முறைகேடுகளையும் இந்த தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment