திருவள்ளுவர் மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரிதா என்ற மாணவி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிக்கு சென்றபோது காணாமல் போனதாக மாணவியின் தந்தை சுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மாயமான மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் கிராமத்தில் கரும்பு தோட்டம் ஒன்று பள்ளி சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் எலும்புக் கூடாக இருந்த மாயமான மாணவி சரிதா_தான் என்பதை உறுதி செய்தனர். பின்னர் எலும்புக்கூட்டை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பள்ளிக்கு சென்ற மாணவி மாயம் தற்போது எலும்புக்கூடாக கிடைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…