சிவசங்கர் பாபா வழக்கு…, 3 ஆசிரியைகளிடம் வாக்குமூலம்.. 2 பேர் தலைமறைவு..!

சிவசங்கர் பாபா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் 3 பேர் சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைதாகி 3 போக்சோ வழக்கு உள்ள நிலையில் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது. இதனால், சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியர்களை அழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டு 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சிவசங்கர் பாபா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 5 ஆசிரியர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி நிலையில் மூன்று ஆசிரியர்கள் நேற்று ஆஜராகினர். எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என  எழுத்துப்பூர்வ பதிவை சிபிசிஐடி போலீசார் பெற்றனர்.

மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தந்தது பற்றி மூன்று ஆசிரியர்கள் 3 பேர் ஆஜராகி வாக்குமூலம் தந்த நிலையில் மேலும் இரண்டு ஆசிரியர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

author avatar
murugan