#BREAKING: சீர்காழி இரட்டை கொலை.. கழிவறையில் வழுக்கி விழுந்த கொள்ளையர்கள்..!

சீர்காழியில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று தன்ராஜ் வீட்டில் காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கழுத்தறுத்து கொன்று விட்டு நகைகளுடன் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, 3 வடமாநில கொள்ளையர்களை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.

அப்போது 3 பேரில் ஒருவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது போலீசார் ஒருவரை என்கவுன்டர் செய்தனர். பின்பு இந்த கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட கருணாராம் நேற்று இரவு போலீசார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர்.

இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் மணீஷ், ரமேஷ் பாட்டீல் காயம் அடைந்தனர். காயமடைந்த இரு கொள்ளையர்களும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

author avatar
murugan