சோக முடிவை எட்டிய சில்க் ஸ்மிதா வாழ்கை! உண்மையை வெளியிட்ட இயக்குனர்!!

80’களில் தமிழ்சினிமாவில் பல இளைஞர்களுக்கு கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. பல படங்களில் தன் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சில்க். இவர் 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23இல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கபட்டது. ஆனால் இன்று வரை அவரது மரணம் மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் விஜயலட்சுமியை(சில்க் ஸ்மிதா) அறிமுகபடுத்திய திருப்பதி ராஜன் தற்போது சில்கை பற்றி பல தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில், ஆரம்ப காலகட்டத்தில் அறிமுக படுத்திய என்னை அவர் புகழின் உச்சிக்கு சென்றபின்பு என்னை மறந்துவிட்டார். பிறகு இறப்பதற்கு 10 நாட்கள் முன்னதாக என்னை சந்திக்க அழைத்தார். ஆனால் நான் போகவில்லை. பிறகு ஒரு ஷூட்டிங்கின் போது அவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார். அவருக்கு தான் இறக்கபோவது முன்கூட்டியே தெரிந்திருந்தது.  அவர் அப்போது, சில அரசியல்வாதிகளின் பிடியில் இருந்தார். அவரின் வாழ்கை வரலாறை நான் புத்தகமாக எழுத உள்ளேன் அதனை சீக்கிரம் வெளியிடுவேன் என்றும் கூறினார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment