சோபியன் என்கவுண்டர்… மீண்டும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் நடந்த மோதலில் மற்றொரு பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் மூலம், இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை இரண்டு ஆக உயர்ந்துள்ளது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை மாலை சோபியனின் ஜைனாபோரா பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் மேற்கொண்டனர். அப்போது,  பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த தேடல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது என தெரிவித்தார்.

author avatar
murugan