மாஸ்டர் படப்பிடிப்பால் நெய்வேலி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம்.! தொழிலாளர் சங்க தலைவர் கருத்து.!

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருவதால் அங்கு உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகளில் நல்ல பிசினஸ் நடந்துகொண்டு இருக்கிறது. இதனால் அங்கு உள்ளவர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் நெய்வேலி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என ஆர்.கே.செல்வமணி கருத்து தெரிவித்தார்.

சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் திடீரென நேற்று பாஜகவினர் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என போராட்டம் செய்தனர். இதுகுறித்து கருத்து கூறிய இயக்குனர் ஆர் கே செல்வமணி மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருவதால் அங்கு உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகளில் நல்ல பிசினஸ் நடந்துகொண்டு இருக்கிறது. இதனால் அங்கு உள்ளவர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் நெய்வேலி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும். அதை அரசியல் காரணங்களுக்காக தயவுசெய்து கெடுத்துவிட வேண்டாம்.

இதைத்தொடர்ந்து உச்ச நடிகர்களில், நடிகர் விஜய் மட்டுமே தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்துகிறார். சினிமாவை சினிமாவாக விட்டு விடுங்கள் அதை பெரிதுபடுத்தி பிரச்னை ஆக்கவேண்டும். ஜோசப் விஜய், இப்ராஹிம், செல்வமணி யார் வேண்டுமானாலும் தமிழ் திரைப்படத்துறையில் இருக்கலாம் என்றும், மற்ற மாநிலங்கள் திரைத்துறையை ஆதரிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரைத்துறையை எதிரியாகப் பார்க்கிறார்கள். தமிழகத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது அரசியல்வாதிகள் படப்பிடிப்புக்கு இடையூறு செய்வதால்தான் படக்குழுவினர் பலர் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு செல்கிறார்கள். இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான பணம் இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்று அந்த நிலைமையை உருவாக்க வேண்டாம் என்றும் ஆர்கே செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

47 mins ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

49 mins ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

53 mins ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

1 hour ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

2 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

2 hours ago