துப்பாக்கி சுடுதல் போட்டி – நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்று அசத்தல்!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் பதக்கங்களை வென்றது.

திருச்சியில் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில், 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில்  தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு 28- தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதில் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது அணி பங்கேற்று இருந்தது அனைவருக்கு தெரிந்ததே.

இந்த நிலையில், திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் குமாரின் அணி 4 தங்கம், 2 வெண்கலம் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர், 50மீ. பிரீ பிஸ்டல் மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளில் அஜித்தின் அணி வெற்றி பெற்றுள்ளது. 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பரிசு வழங்கபடுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment