39 ஆயிரம் பேர் எழுதிய 10th தனித்தேர்வு! 20% பேர் தேர்ச்சி-தேர்வர்கள் அதிர்ச்சி

10 மற்றும் +12 வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது.

கொரோனா பரவல் காரணமாக 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.ஆனால் 10வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 10,11 மற்றும்12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டது.

இதில் 10 மற்றும் +2 வகுப்பு துணைத்தேர்விக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று வெளியாகிய பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.39 ஆயிரம் பேர் எழுதிய துணைத்தேர்வில் 8,000 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளதாக வெளியாகிய முடிவுகளால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

author avatar
kavitha