#BREAKING : பட்டாசு குடோனை ஆய்வு செய்த வெடித்த பட்டாசுகள்..! அதிகாரிகள் காயம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அங்கு செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், 9 பேர்  உயிரிழந்தனர்.

இதில் உணவகத்தில் உள்ள சிலிண்டர் கசிந்ததன் காரணமாக, அருகிலிருந்த பட்டாசுக்கடையிலும் தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று பட்டாசு குடோனை மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் மற்றும் பட்டாசு குழு மேலாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திடீரென்று அங்கு பட்டாசுகள் வெடித்தது. இந்த பட்டாசு வெடித்ததில் தனி வருவாய் அலுவலர் பாலாஜி, வட்டாட்சியர் முத்துப்பாண்டி ஆகியோர் காயமடைந்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.