21 வருடங்கள் கழித்து பிரமாண்ட படம் மூலம் மாஸ் கம்பேக் கொடுக்கும் ஷாலினி.! வேற லெவல் ரீ என்டரி.!

நடிகை ஷாலினி 21 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி . குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.அதன் பின் ஒரு சில படங்களில் நடித்த இவர் அமர்க்களம் படத்தின் மூலம் தல அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகி கணவர் , குழந்தைகள் என குடும்பத்துடன் செட்டிலான ஷாலினி தற்போது 21 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீ என்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே ஷாலினி மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற ஹிட் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் பிரமாண்ட படத்தின் மூலம் மாஸ் கம்பேக் ஷாலினி கொடுப்பதாக வெளியான தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.