தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆட்டத்தை காண ஆவலுடன் காத்துள்ளேன்..! ஷாருக்கான்

இன்று அனைத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும் மோதவுள்ளது.

இந்நிலையில் இந்த வருடத்தின் ஐபிஎல் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் மிகவும் கடினமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணி மற்றும் மும்பை அணி இரண்டு அணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து டிவிட் ஒன்றை செய்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.