பரபரப்பு : 4 வயது மகனுடன் ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்..!

சென்னை ஊரப்பாக்கத்தில் தனது நான்கு வயது மகனுடன் ரயிலில் விழுந்து  தற்கொலைக்கு முயன்ற பெண். 

சென்னை சேர்ந்த பிரேமலதா என்ற அரசு ஊழியராக உள்ளார். இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக சென்னை ஊரப்பாக்கத்தில் தனது நான்கு வயது மகனுடன் ரயிலில் விழுந்து  தற்கொலை செய்வதற்காக முயன்று உள்ளார்.

இந்த நிலையில் தண்டவாளத்தில் அப்பெண் வருவதை பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலே உடனடியாக நிறுத்தினார். இருப்பினும் மிதமான வேகத்தில் ரயில் அவர்கள் மீது மோதியதால் இருவரும் காயம் அடைந்தனர்.

இதனை அடுத்து ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வர இயலாத காரணத்தால் பயணிகளின் உதவியுடன் இருவரையும் அதே ரயிலில் ஏற்றினர். பின் தாம்பரம் கொண்டு வந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment