இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் – 25.90% வாக்குப்பதிவு!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி வரை 25.90% வாக்குகள் பதிவு என தேர்தல் ஆணையம் தகவல்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 6ம் தேதி முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது 77.43% வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, இன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 25.90% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் -25.28%, செங்கல்பட்டு -26.07%, கள்ளக்குறிச்சி -29.10%, வேலூர் -24.23%, ராணிப்பேட்டை -22.19%, திருப்பத்தூர் -12.13%, நெல்லை – 22.89%, தென்காசி 26.67% மற்றும் அதிகபட்சமாக விழுப்புரத்தில் -32.41% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்