ரெடியா ! இன்று முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கியதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது.இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வழியாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த 5 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டு  இருந்தது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவடைந்தது.வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இதனால் மீண்டும் 12 ஆம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.

வாக்குச்சாவடிகளாக செயல்பட்ட பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கொரோனா பரவல் தடுக்க  மிகுந்த பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இன்று முதல்  12ம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் படி தொடங்குகிறது.அதன்படி ஒவ்வொரு பள்ளிகளையும் சுத்தப்படுத்தும் பணிகளை முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் மே 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் மே 3ஆம் தேதிக்கு பதிலாக ஒரு வார காலம் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dinasuvadu desk

Recent Posts

தூங்கிக்கொண்டு இருந்த வாட்ச்மேன்! கேட் ஏறி விஜயகாந்த் செஞ்ச விஷயம்?

Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…

20 mins ago

வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.!

VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…

27 mins ago

மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா.. காரணம் என்ன?

China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…

45 mins ago

மீண்டும் ஏகிறியது தங்கம் விலை…சவரன் ரூ.360 உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…

1 hour ago

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…

1 hour ago

இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!

Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…

1 hour ago