ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வு மாணவர்களுக்கு உதவித்தொகை-நிதியமைச்சர்.!

2023-24க்கான தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர், இந்திய குடிமைப் பணித்தேர்வர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடந்துவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அவர் தனது பட்ஜெட் உரையில், இந்திய குடிமைப் பணித்தேர்வுகளில் தேர்வான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் குடிமைப்பணித்தேர்வுகளில் தேர்வான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுகளில் தேர்வான மாணவர்களுக்கு முதல்நிலைத்தேர்வுகளுக்கு தயாராக மாதம் ரூ.7500 மற்றும் முதன்மைத்தேர்வுகளுக்கு  ரூ.25000 வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment