“எனது தந்தை எஸ்.பி.பியின் உடல்நிலை நேற்றை விட சீராக உள்ளது”- எஸ்.பி.பி சரண்!

எஸ்.பி.பி மெல்ல மெல்ல தேறி வருவதாகவும், நேற்றைவிட அவரின் உடல்நிலை நேற்றை விட சீராக உள்ளதாகவும் அவரின் மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், எனது தந்தை எஸ்.பி.பி. மெல்ல மெல்ல தேறி வருகிறதாகவும், நேற்றைவிட தற்போது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்தார்.