இனிமே பொடுகு தொல்லைக்கு சொல்லுங்க குட் பை! சூப்பர் டிப்ஸ் இதோ!

நாம் அனைவரும் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் கண்டிப்பாக இந்த பொடுகு தொல்லையை அனுபவித்திருப்போம். இந்த பதிவில் அதை சரி செய்யக்கூடிய எளிய குறிப்புகளை பார்ப்போம்.

பல குறிப்புகளை பயன்படுத்திருப்போம். ஆனால் அதை முறையாக பயன் படுத்தியிருக்க மாட்டோம். இதனால் நிறைய நேரங்களில் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டிருக்கும். இதனால் ஏற்படும் அரிப்பை நம் கடந்து செல்ல முடியாத ஒன்று. சில குறிப்புகளை பயன்படுத்தி 10 நாளில் கூட சரி ஆகியிருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் போகாது.

இது ஒரு பூஞ்சை தொற்று. மேலும் அதிக வேர்வை வரும் போதும் உருவாகும். அதுமட்டும் அல்லாமல் முடிக்கு எண்ணெய் வைக்காமல் இருந்தாலும் ஏற்படும்.

ஆப்பிள் சைடர் வினிகர் 2 ஸ்பூன் தண்ணீர் 2ஸ்பூன் கலந்து முடியின் வேற்பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். வாரத்திற்கு 2 நாள் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் தலை முடிக்கு தேவையான தேங்காயெண்ணை எடுத்து   கொள்ளவும் அதே அளவு லெமன் சாறும்  எடுத்து கொள்ளவும்.இப்போது தேங்காயெண்ணையை சூடு செய்து லோமென் சாறையும் சேர்க்கவும் .இந்த கலவையை முடியின் வேர்ப்பகுதியில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து கழுவி வரவும் .

மக்களே..! இனிமேல் இந்த பழத்தின் தோலை தூக்கி எறியாதீர்கள்..!

ஆரஞ்சு தோலை பச்சையாக எடுத்து அரைத்து அதிலே லெமன் சாறு சேர்த்து அந்த கலவையை முடியின் வேர்ப்பகுதியில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளிக்கவும் .

சீகைக்காய் பயன்படுத்தினால் முடியை நன்றாக கழுவ வேண்டும் .இல்லையென்றால் அதில் உள்ள சிறு துகள்கள் தலையில் தேங்கி பொடுகை ஏற்படுத்தும் .ஒருவேளை சிகைக்காய் போட்டு குளிக்க வேண்டுமென்றால் கட்டாயம் எண்ணெய்  வைத்து குளிக்க வேண்டும்

கருஞ்சீரகத்தை வறுத்து தண்ணீர் விட்டு அரைத்து முடியின் வேர் பகுதியில் தேய்த்து குளிக்க வேண்டும் .கருங்கீரகம் தேய்ப்பதற்கு முன்னாடி நாளே தலைக்கு குளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் .

வேப்பஎண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவு எடுத்து முடிக்கு தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வரவும் .இவரு செய்து வந்தால் முடி வறட்சி ஏற்படாது .இவற்றை நம்ம சுழற்சி முறையில் மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தால் 3 மாதங்களில் சரியாகிவிடும் .மேலும் தேங்காய் எண்ணெயை முறையாக தேய்த்து வந்தால் பொடுகு  தொல்லைகள் வராது .

இவற்றை பயன்படுத்துவதால் எந்த ஒரு பாதிப்பும் வராது .  ஆகவே இந்த முறைகளை பின்பற்றி நம் பொடுகை ஒழித்து

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.