சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனசூழல் சுற்றுலா தொடக்கம்..!

கோடை விடுமுறையை முன்னிட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனசூழல் சுற்றுலா மே மாதம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் 6 வனச்சரகங்களிலும் உள்ள வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அழைத்துச்செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறைக்காலம் என்பதால் மே 31ஆம் தேதி வரை எல்லா நாட்களிலும் முன்பதிவு செய்து வனச்சுற்றுலாவில் பங்ககேற்கலாம் எனவும், str.tn.org என்ற இணைய முகவரியிலும், 9750659436 என்ற எண்ணிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment