படப்பிடிப்பில் கேரவனை மாற்ற சொல்லி அடம்பிடித்தாரா சதீஸ்.!? என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் இருப்பவர் நடிகர் சதீஸ். இவர் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பிரச்னையும் கொடுக்கமாட்டார். தயாரிப்பாளரின் விருப்பத்திற்கேற்ப நல்லபிள்ளையாக நடந்துகொள்வார் என சினிமா வட்டாரத்தில் இவருக்கென நல்ல பெயர்தான் உண்டு.

ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி காற்றில் பரவியது. அதாவது. தற்போது சதீஸ் ஷூட்டிங் வந்தால், தனது காரிலேயே இருந்துகொண்டு தனது உதவியாளரை வைத்து கேரவன் எப்படி இருக்கு என பார்த்துவிட்டு வர சொல்கிறார். கேரவன் சரியில்லை என்றால் வேறு கேரவன் மாற்ற சொல்கிறார் என செய்தி வெளியானது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சதீஸ் தரப்பு. அதாவது, அப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஆனால், அது கேரவனில் வசதி குறைவாக இருப்பதாக பார்ப்பதற்காக இல்லை. கொரோனா காலம் என்பதால் சானிடைசர் தெளிக்க சொல்லிவிடுவதாகவும், சதீஸ் வீட்டில் குழந்தை இருப்பதால் கவனமாக இருப்பதற்காக கேரவன் சுத்தமாக இருபதாக பார்க்க சொல்வதாகவும் சதீஸ் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.