ஆறுமுறை கிராண்ட் சிலாம் பட்டம்..!! இப்ப அம்மா பட்டம்..!மீண்டும் டென்னிசை நோக்கி சானியா..!!

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் மூடிசூடா  வீராங்கனையாக  வலம் வந்தவர் சானியா மிர்சா. மேலும் இரட்டையர் பிரிவில் ஆறுமுறை கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for sania mirzaஇந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் ஆண் குழந்தை  ஒன்று பிறந்தது. இதனால் டென்னிஸ் உலகில் சிறிது ஓய்வு எடுத்த நிலையில் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் போட்டியில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related image

இது குறித்து சானியா கூறுகையில் நான் முன்னால் மனைவியாக இருந்தேன். இப்போது அம்மாவாகி உள்ளேன். இதற்கிடையில் மீண்டும் டென்னிசில் டாப் நிலையை பெற முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் அது மிகவும் எளிதானது இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் இதை செய்வதைவிட வேறு மதிப்பு ஏதும் இல்லை.

மேலும் என்னுடைய பிரதானமான இலக்கே மீண்டும் டென்னிஸ் விளையாட்டிற்கே திரும்பவும் செல்ல வேண்டும் என்பது தான். அது இந்த வருட இறுதியில்  நடக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் இதற்கு முன் பேசும்போது 2020 ல் மீண்டும் விளையாட்டிற்கு  திரும்புவேன் என்று கூறினேன் அதற்கு காரணங்கள் உள்ளது. அது என்னவென்றால் எனக்கு நானே நெருக்கடியை கொடுக்க விரும்பவில்லை. இப்போது வரை அதை நான் செய்யவில்லை.

Image result for sania mirza

ஒரு குழந்தை வீட்டில் உள்ள போது வாழ்க்கை மிகப்பெரிய அளவில் மாற்றமடைகிறது. எந்தவொரு விஷயத்திற்கும் முக்கியத்துவம் இங்கு கொடுக்க முடியாது.

Related image

மேலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர்களது வாழ்க்கையில் கொஞ்சம் செல்பிஷ் உள்ளது. இது அவர்களுடைய பிட்னெஸ் மற்றும் ஓய்வு வேலையைப் பற்றியது என்று புன்னகை மிளிர கூறுகிறார்.

author avatar
kavitha

Leave a Comment