முக்கியத்துவம் இல்லாததால் நயன்தாராவின் படத்திலிருந்து விலகிய சமந்தா!

தனக்கு முக்கியத்துவம் இல்லாததாலும் செகண்ட் ஹீரோயினாக தான் ட்ரீட் பண்ண படுவோம் என்பதாகவும் உணர்ந்த சமந்தா நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் காதலனும் இயக்குனரும் ஆகிய விக்னேஷ் சிவன் அவர்கள் தற்பொழுது நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு நயன்தாராவை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதுபோல தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹீரோயினாக நயன்தாராவும் இன்னொரு ஹீரோயினாக சமந்தாவும் நடிக்கிறார் என அண்மையில் தகவல் வெளியாகியாது.

இந்நிலையில் தற்போது சமந்தா அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன்என்றால் படத்தின் கதையில் நயன்தாராவை விட தனக்கு முக்கியத்துவம் குறைவாக இருப்பதாலும், தான் இரண்டாவது கதாநாயகியாக எனப்படுவதாகவும் உணர்ந்ததால் சம்பநத விலகியதாக கூறப்படுகிறது. சமந்தா தேர்வு செய்யப்பட்ட கேரக்டரில் முன்னணி நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய யாராவது ஒருவரை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal