ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி….!!

ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான வெடிமருந்து குடோன் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த குடோனில் இரவு , பகலாக சுழற்சி முறையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடோனுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்தால் அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து காவல்துறையினர் ஒத்திகை நடத்தினர். பயங்கரவாதிகளைபோல் வேடமிட்டு பதுங்கியிருந்தவர்களை காவலர்கள் மடக்கி பிடித்தனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment