திருமண விழாவில் சோகம்.! ஒரே நேரத்தில் 19 பெண்கள் ஆற்றில் மூழ்கி மரணம்.! மீட்பு பணி தீவிரம்..

பாகிஸ்தானில் சிந்து நதிக்கரையில் திருமண விழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 19 பெண்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில், ரஹீம் யார் கான் பகுதியில் இருந்து சுமார் 65 கிமீ தொலைவில் உள்ளது மச்கா எனும் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது.

இந்த திருமணத்திற்காக, ராஜன்பூரில் இருந்து, மச்காவுக்கு சிந்து நதிக்கரை வழியே, சுமார் 100 பேரை ஏற்றிக்கொண்டு ஓர் சிறிய ரக கப்பல் மூமல் வந்துள்ளனர்.

அப்போது, நீரின் வேகம் அதிகமான காரணத்தாலும், அதிகம் பேர் சிறிய கப்பலில் பயணித்த காரணத்தாலும், அது கவிழ்ந்துள்ளது. இதனால் அனைவரும் நீரில் இழுத்து செல்லப்பட்டனர்.

தகவலறிந்து வந்த மீட்புக்குழு இதுவரை 19 பேரின் உடல்களை மீட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பெண்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கோர சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளையும் முடிக்கிவிட சொல்லி இருக்கிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment