சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு..!!!

திருச்சியில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் பைக்கில் வந்த இருவர் நகையை பறித்து சென்றுள்ளனர். திருச்சி கே.கே.நகர், ஐயப்பன் நகரை சேர்ந்தவர் ஆனந்தி (65). இவர் திருவள்ளுவர் நகரில், தனியாக நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment