தென்னாப்பிரிக்கா இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி!

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில்  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. மணீஷ் பாண்டே அதிரடியாக விளையாடி 79 ரன்களைக் குவித்தார். தோனி 52 ரன்களும், ரெய்னா 31 ரன்களும் சேர்த்தனர்.

Image result for ind vs sa live score

தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டும்னி ஆட்டமிழக்காமல் 64 ரன்களும், க்ளாசன் 69 ரன்களும் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment