ரூ.2000 மாற்ற வங்கிகளில் சிறப்பு கவுண்டர்.! வயதானவர்கள் வரிசையில் நிற்க தேவையில்லை….

ரூ.2000 மாற்ற சிறப்பு கவுண்டர் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டம்.

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, பொதுமக்கள் மே மாதம் 23-ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சிறப்பு கவுண்டர்:

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் வசதிக்காக வங்கிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ரூ.2000 மாற்ற சிறப்பு கவுண்டர் அமைக்க உள்ளதாகவும், வயதானவர்கள் வரிசையில் நிற்காத வகையில் தனி வசதி உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆவணம் தேவையில்லை:

ஏற்கவே, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு பொதுமக்கள் எந்தவொரு அடையாள ஆவணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை என பாரத ஸ்டேட் வாங்கி தெரிவித்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் ரூ.20,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.