நாளை மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.!

நாளை மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.!

Kejriwal - Mamata

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, நாளை கொல்கத்தாவில் மாலை 3 மணிக்கு மேற்கு வங்க முதல்வரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளதாக கெஜ்ரிவால் நேற்று தகவல் தெரிவித்தார். இந்த சந்திப்பில் டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.

மேலும், மத்திய அரசுக்கு எதிராக கெஜ்ரிவால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று கெஜ்ரிவாலை சந்தித்த நிதிஷ் குமார் இதுகுறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர் 24ம் தேதி மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரேவையும், மே 25 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவாரையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube