தூய்மை பணியாளர் பாக்கியலெட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்- முதல்வர் அறிவிப்பு .!

விபத்தில் காயமடைந்த்த தூய்மை பணியாளர்  பாக்கியலெட்சுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழவீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி திருமதி பாக்கியலெட்சுமி என்பார் சுய உதவிக்குழுவின் மூலம் தூய்மைப் பணியாளராக திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலத்தில் கடந்த 28 தேதி அன்று நுண் உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் மக்கும் குப்பைகளை பிரித்து போடும் போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் கை சிக்கி முற்றிலும் சிதைத்து.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்த்த தூய்மை பணியாளரின் மருத்துவ செலவு முழுவதும் அரசே ஏற்கும், மேலும் சிறப்பினமாக இவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

author avatar
murugan