100 கோடி பார்வையாளர்களை கடந்து “ரவுடி பேபி” பாடல் சாதனை.!

100 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை ரவுடி பேபி பாடல் பெற்று சாதனை படைத்துள்ளது .

கடந்த 2018-ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரி2. இதில் சாய் பல்லவி,டொவினோ தோமஸ் , ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் . யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது .

அதிலும் ரவுடி பேபி பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது . பட்டி தொட்டி எல்லாம் டிரெண்டான இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் நடனம் வேற லெவலில் பாராட்டப்பட்டது . தற்போது ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது . அதாவது 100 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை ரவுடி பேபி பாடல் பெற்றுள்ளது .

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில்  தனுஷ்  கூறியதாவது , என்ன ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு . இன்று கொலவெறி பாடல் வெளியாகி 9 வருடங்களை எட்டியுள்ளது. அதே நினைவு நாளில் ரவுடி பேபி பாடல் 100 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்ற முதல் தென்னிந்திய பாடல் இது என்பதற்காக பெருமையடைவதாகவும் , எங்கள் படத்தின் முழு அணிக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Comment