மிகப்பெரிய தேசிய புதையல்- சாஹலிற்கு வாழ்த்து தெரிவித்த ரோஹித்.!

ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுஸ்வேந்திர சாஹலிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்,

இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார், அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி கூறவே வேண்டாம், இந்திய அணியில் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை தனது பந்துவீச்சால் மீட்டர், மேலும் பல விக்கெட் சாதனைகளும் கைவசம் வைத்துள்ளார், இவர் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடுவர். இந்த நிலையில் அவருக்கு இன்று 31 வது பிறந்த நாள் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுஸ்வேந்திர சாஹலிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார், அதில் அவர் கூறியது ” பிறந்த நாள் வாழ்த்து யுஸ்வேந்திர சாஹல் நீங்கள் மிகப்பெரிய மிகப்பெரிய தேசிய புதையல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.